Friday, July 9, 2010

வசன கவிதை - 71




ஞானோதயம்





அவலம் பேரவலம் தான்.
இதை -
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
கவிதைகளால் கண்டிக்க முடியாது.
மாநாடுகளால் மறைக்க முடியாது.

பேரவலம் என்பது நிகழ்வதல்ல-
நிகழ்வதைக் கண்டுகொண்டிருப்பது;
கண்டும் காணாமல் இருப்பது.
கண்மூடி முகம் திருப்புவது.
இதற்கு -
சலுகைகளால் சமாதி கட்ட முடியாது.

பேரவலம் தவிர்க்க முடியாததல்ல.
அதிகார பீடங்கள் உண்மையை மறுப்பது;
ஆணவக்காரர்கள் ஆர்வத்தில் விளைவது.
-இதனால்
அமைதியை நிலைநாட்ட முடியாது.

பேரவலங்கள்
மறைக்க முடியாதவை;
மறுக்க முடியாதவை;
மன்னிக்க முடியாதவை.
அலங்கார அறிவிப்புகளால்
மனப்புண்ணை ஆற்ற முடியாது.
உபதேசங்களால் யாரையும்
திருத்தவோ, திருந்தவோ செய்ய முடியாது.

இதனை -
எழுதுவதாலும் யாரும்
நிம்மதி பெற்றுவிட முடியாது...
.

No comments:

Post a Comment