Thursday, June 17, 2010

வசன கவிதை - 68


செம்மொழி மாநாட்டை நோக்கி...17

மற்றுமொரு வாய்ப்பு...


புதிய நடைபாதை உருவாக்குவது
தார்ச்சாலை புதுப்பிப்பது
சித்திரங்கள் வரைவது
பூங்காக்கள் அமைப்பது
விளம்பரங்கள் வைப்பது
தெருவிளக்குகளை மாற்றுவது
புத்தகங்கள் வெளியிடுவது
விருந்தாளிகளை உபசரிப்பது
பொம்மைகள் தயாரிப்பது
விளக்கக் கூட்டம் நடத்துவது
ஆய்வரங்கு கூட்டுவது....
இன்னபிற பணிகள் எல்லாமே
அமர்க்களம்.

இந்தப் பணிகள் எல்லாமே நல்வாய்ப்பு-
செம்மொழித் தமிழ் புகழ் பரப்ப.
மட்டுமல்லாது,
கழகக் கண்மணிகளுக்கும்
மற்றுமொரு வர்த்தக வாய்ப்பு.
.

No comments:

Post a Comment