Wednesday, June 2, 2010

வசன கவிதை - 58


செம்மொழி மாநாட்டை நோக்கி...2

நினைவுச் சங்கிலியின் அறுபட்ட கண்ணிகள்


எல்லா மண்டபங்களும்
அரசு வசம்;
எல்லா முகாம்களும்
காவலர் வசம்.

அகதிகள் வெளியேற
அனுமதி இல்லை;
அரசாங்க மாநாடு
முடியும் வரையில்.

கருப்புச் சாலைக்கு
செம்மண் பூச்சு;
தொலைந்த தமிழுக்கு
செம்மொழிப் பூச்சு.

எல்லா இடங்களிலும்
வள்ளுவர் சின்னம்;
நினைவில் வந்தது
வேந்தமைவுக் குறள்.

.

No comments:

Post a Comment