Friday, June 25, 2010

உருவக கவிதை - 47



காற்றுக்குமிழிகள்




முன்னொரு காலத்தில்
கிரேக்க வீரன் அலெக்சாண்டர்.
இடைக்காலத்தில்
சீன செங்கிஸ்கான்.
18-ம் நூற்றாண்டில்
நெப்போலியன் போனபோர்டே
70 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்லர், லெனின், மாவோ, ஸ்டாலின்,...

வெற்றியில் திளைத்த நேரத்தில்
உலகத் தலைவர்களாக
முடிசூடியவர்களின் பட்டியல் இன்னும் நீளம்.

காற்றுக்குமிழிகளின் வனப்பில்
உலகம் சில நேரம் அதிசயித்தது.
குறுகிய காலத்தில் எவரையும்
புதைத்து எக்காளமிடுவது வரலாறு.
காற்றுக்குமிழிகளின் வாழ்நாள்
சாற்றுவதும் அரிதோ?


ஓராண்டுக்கு முன்பு
கொல்லப்பட்ட தம்பியை மறக்க
செம்மொழியில் திளைக்கும்
செஞ்சோற்று உதியலாத நெடுஞ்செழிய
விசயாலாய, மகேந்திர வர்ம, சேரமான்
அண்ணனுக்கு வந்தனம்!


உலகத் தமிழ்த் தலைவரென்ற
பத்திரங்கள் பத்திரம்!.
.

1 comment:

Unknown said...

mikavum arumai anna

Post a Comment