Monday, November 30, 2009

வசன கவிதை - 29


கண் மேல் திரை

கடியர்களின் விமர்சனமும்
கடியாகத் தான் இருக்கும்;
நல்லவன் கண்களுக்கு மட்டுமே
நல்லவன் தட்டுப்படுவது போல.
தன்னம்பிக்கை கொண்டவன் நான்.

நீ கடியன் என்று சொல்லவில்லை;
ரசிக்கத் தான் உனக்கு தெரியவில்லை.

உன் கண்களின் மேல்
'கடித்திரை' விழுந்திருக்கிறது.
பரவாயில்லை-
அதையும் ஊடுருவும்
கவிதை என்னிடம் இருக்கிறது.

'கடி' என விமர்சிப்பது
கடினமல்ல-
கவிதை எழுதுவது கடினம்.
புரிந்துகொள்;
மேலும் புண்படுத்தாதே.

கவிதை செத்துவிடும்.

குறிப்பு: பாலிடெக்னிக்கில் படித்த போது எனது கவிதையை படிக்காமலே இகழ்ந்த
நண்பனுக்கு எழுதிய கவிதை இது. எழுதிய நாள்: 08.02.1989

No comments:

Post a Comment